துபாய் : ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து துபாயில் உள்ள பாகிஸ்தான் சங்கம் ( பிஏடி ) இலவசமாக உணவு வழங்கும் பணியை செய்து வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. துபாயில் அரச குடும்பத்தில் உள்ள சுமார் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கத்தால் பல நாடுகளிலும் மக்கள் பசியாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்